Warrant Balaw Blog - वारंट बाला चिट्ठा

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியம் உணர்ந்து இந்த வலைப்பூவிற்கு வருகை தந்துள்ள உங்களை வருக! வருக!! என அன்புடன் வரவேற்று பயன் பெறுக! பெறுக!! என வாழ்த்துகிறேன்.

Neethiyaithedy

,

,

..

..

Mar 16, 2011

தேர்தல் விழிப்பறிவுணர்வு

இப்பதினெட்டு நிமிட குறும்படமானது தேர்தல் குறித்த விழிப்பறிவுணர்வை கேள்வி பதில் முறையில் ஊட்டக்கூடியது ஆகும்.
இதில் ஒரு குடிமகனுக்கு எந்த சட்டத்தின்படி, எந்த வயதில் வாக்குரிமை வருகிறது.
உண்மையான மக்களாட்சி நடக்க தேர்தல் முடிவு எப்படி இருக்க வேண்டும்?
அக்காலத்தில் வாக்குரிமைக்கு முன்பாக இருந்து வந்த குடவோலை முறை தேர்தல் பற்றிய விபரம்...
ஒவ்வொருவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் என்ன?
எந்த வேட்பாளரையும் பிடிக்காத போது என்ன செய்வது? போன்ற விபரங்கள் விளக்கப்பட்டுள்ளன.

தேர்தல் விழிப்பறிவுணர்வு

இப்பதினெட்டு நிமிட குறும்படமானது தேர்தல் குறித்த விழிப்பறிவுணர்வை கேள்வி பதில் முறையில் ஊட்டக்கூடியது ஆகும்.
இதில் ஒரு குடிமகனுக்கு எந்த சட்டத்தின்படி, எந்த வயதில் வாக்குரிமை வருகிறது.
உண்மையான மக்களாட்சி நடக்க தேர்தல் முடிவு எப்படி இருக்க வேண்டும்?
அக்காலத்தில் வாக்குரிமைக்கு முன்பாக இருந்து வந்த குடவோலை முறை தேர்தல் பற்றிய விபரம்...
ஒவ்வொருவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் என்ன?
எந்த வேட்பாளரையும் பிடிக்காத போது என்ன செய்வது? போன்ற விபரங்கள் விளக்கப்பட்டுள்ளன.

Mar 6, 2011

நமது நி(நீ)தித்துறை...

இன்றைய நமது நி(நீ)திமன்றங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை நகைச்சுவை உணர்வோடு எட்டு நிமிட இக்குறும்படம் சொல்கிறது.
உண்மையில், இதை விட மோசமான நிலைதான் இன்றைய இந்திய நீதித்துறையில் நிலவுகிறது என்பது, நீதிமன்றத்தை அனுதினமும் அணுகும் வழக்காளிகளுக்குத்தான் தெரியும்.
இக்குறும்படத்தில் பல்வேறு வகையான உண்மைகள் பொதிந்துள்ளன. அதாவது, உண்மையில் நீதிமன்றத்தில் எப்படி சாட்சிகள் விசாரணை, குறுக்கு விசாரணை நடைபெறுகிறது என்பது குறித்து புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். பல முறை இதனை திரும்பத் திரும்ப பார்ப்பதன் மூலம் நீங்கள் பல்வேறு விதமான புரிதல்களை உணரலாம்.
நன்றி விஜய் தொலைக்காட்சி

நமது நி(நீ)தித்துறை...

இன்றைய நமது நி(நீ)திமன்றங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை நகைச்சுவை உணர்வோடு எட்டு நிமிட இக்குறும்படம் சொல்கிறது.
உண்மையில், இதை விட மோசமான நிலைதான் இன்றைய இந்திய நீதித்துறையில் நிலவுகிறது என்பது, நீதிமன்றத்தை அனுதினமும் அணுகும் வழக்காளிகளுக்குத்தான் தெரியும்.
இக்குறும்படத்தில் பல்வேறு வகையான உண்மைகள் பொதிந்துள்ளன. அதாவது, உண்மையில் நீதிமன்றத்தில் எப்படி சாட்சிகள் விசாரணை, குறுக்கு விசாரணை நடைபெறுகிறது என்பது குறித்து புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். பல முறை இதனை திரும்பத் திரும்ப பார்ப்பதன் மூலம் நீங்கள் பல்வேறு விதமான புரிதல்களை உணரலாம்.
நன்றி விஜய் தொலைக்காட்சி

Mar 5, 2011

இந்திய குடிமக்களாகிய நாம்...

இந்திய குடிமக்களாகிய நாம், ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலைப் பெற்றதும், நாமே, நம்மை ஆட்சி செய்து கொள்வதற்காக வரையறை செய்து கொண்ட உறுதிமொழி ஆவணமே, இந்திய அரசமைப்பு ஆகும். 

இதுவே, நமது இந்திய தாய்த்திருநாட்டையும், நம்மையும் நல்வழிப்படுத்தி அழைத்துச் செல்வது கும். இதில் சொல்லப்பட்ட வழி முறைகளின்படிதான் குடிமகன் முதல் குடியரசு தலைவர் வரை தத்தம் கடமைகளை ஆற்ற வேண்டும் என்பதால் இதுவே முதன்மையானதும் ஆகும்.

அதாவது, வ்வொரு இந்திய குடிமகன் முதல் குடியரசு தலைவர் வரையிலான குடிமக்கள் அனைவரும் இதற்கு கட்டுப்பட்டவர்களே! உட்பட்டவர்களே!!

இதனை, இந்திய அரசியல் சாசனம் அல்லது இந்திய அரசியல் சட்டம் என பலரும் தத்தம் மனம் போன போக்கில் தவறாகவே, சொல்லுகின்றனர், எழுதுகின்றனர். இது முற்றிலும் தவறு. 

ஏனெனில், இது இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளுக்கான சட்டம் (பைலா) அன்று.

மாறாக, இந்திய அரசாங்கத்தை, இந்திய அரசாங்கத்தை நிறுவுவதற்கும், நல்வழிப்படுத்து வதற்கும், தலைமை தாங்குவதற்கும் அத்தியாவசிய தேவையான தேர்தல் ஆணையம், நீதித்துறை, குடியரசு தலைவர் போன்ற அதிகார அமைப்புகளை நிறுவுவது மற்றும் இந்திய அரசுக்கு உட்பட்ட மாநில அரசுகளை நிறுவுவது எப்படி என்பதற்கான வழிகாட்டு நெறிமுறை ஆவணமாகும்.

இந்திய குடிமக்களாகிய நாம், நமது, மதம் பிடித்த மதக்கொள்கைகளை, சதி செய்யும் சாதி ச(த)ரித்திரங்களை வெறுத்து வேரறுப்போம்.

இந்திய அரசமைப்பின் நற்கொள்கை மிக்க கோட்பாடுகளை தெரிந்து, அதன்வழி நடந்து சிறந்த குடிமகனாக வாழ்வோம். மற்றவர்களையும் வாழ வைப்போம்.

இந்திய குடிமக்களாகிய நாம்...

இந்திய குடிமக்களாகிய நாம், ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலைப் பெற்றதும், நாமே, நம்மை ஆட்சி செய்து கொள்வதற்காக வரையறை செய்து கொண்ட உறுதிமொழி ஆவணமே, இந்திய அரசமைப்பு ஆகும். 

இதுவே, நமது இந்திய தாய்த்திருநாட்டையும், நம்மையும் நல்வழிப்படுத்தி அழைத்துச் செல்வது கும். இதில் சொல்லப்பட்ட வழி முறைகளின்படிதான் குடிமகன் முதல் குடியரசு தலைவர் வரை தத்தம் கடமைகளை ஆற்ற வேண்டும் என்பதால் இதுவே முதன்மையானதும் ஆகும்.

அதாவது, வ்வொரு இந்திய குடிமகன் முதல் குடியரசு தலைவர் வரையிலான குடிமக்கள் அனைவரும் இதற்கு கட்டுப்பட்டவர்களே! உட்பட்டவர்களே!!

இதனை, இந்திய அரசியல் சாசனம் அல்லது இந்திய அரசியல் சட்டம் என பலரும் தத்தம் மனம் போன போக்கில் தவறாகவே, சொல்லுகின்றனர், எழுதுகின்றனர். இது முற்றிலும் தவறு. 

ஏனெனில், இது இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளுக்கான சட்டம் (பைலா) அன்று.

மாறாக, இந்திய அரசாங்கத்தை, இந்திய அரசாங்கத்தை நிறுவுவதற்கும், நல்வழிப்படுத்து வதற்கும், தலைமை தாங்குவதற்கும் அத்தியாவசிய தேவையான தேர்தல் ஆணையம், நீதித்துறை, குடியரசு தலைவர் போன்ற அதிகார அமைப்புகளை நிறுவுவது மற்றும் இந்திய அரசுக்கு உட்பட்ட மாநில அரசுகளை நிறுவுவது எப்படி என்பதற்கான வழிகாட்டு நெறிமுறை ஆவணமாகும்.

இந்திய குடிமக்களாகிய நாம், நமது, மதம் பிடித்த மதக்கொள்கைகளை, சதி செய்யும் சாதி ச(த)ரித்திரங்களை வெறுத்து வேரறுப்போம்.

இந்திய அரசமைப்பின் நற்கொள்கை மிக்க கோட்பாடுகளை தெரிந்து, அதன்வழி நடந்து சிறந்த குடிமகனாக வாழ்வோம். மற்றவர்களையும் வாழ வைப்போம்.

Feb 27, 2011

Popular Posts

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியம் உணர்ந்து இந்த வலைப்பூவிற்கு வருகை தந்துள்ள உங்களை வருக! வருக!! என அன்புடன் வரவேற்று பயன் பெறுக! பெறுக!! என வாழ்த்துகிறேன்.
 photo Indian_Flag_Pole.gif

Social Media's

Total Pageviews

Labels

Flash Labels by Blogger Widgets

Unordered List

Followers

 photo Animation4.gif
Related Posts Plugin for WordPress, Blogger...